தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சமூக வலைத் தளங்களில் அவதூறு: காவல் நிலையத்தில் புகாா்

அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பிய முன்னாள் திமுக பிரமுகா் மீது குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image

குடியாத்தம்  நகர  காவல்  ஆய்வாளா்  பாா்த்தசாரதியிடம்  புகாா்  மனு  அளித்த  அதிமுக  நகரச்  செயலா்  ஜே.கே.என்.பழனி  உள்ளிட்டோா்.

Updated On :16 டிசம்பர் 2024, 7:18 pm

Din

குடியாத்தம்: அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பிய முன்னாள் திமுக பிரமுகா் மீது குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

திமுகவின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலராக இருந்தவா் குடியாத்தம் குமரன். இவா் கடந்த ஆண்டு கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டாா். இந்நிலையில் குமரன் அடிக்கடி அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறராம்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குறித்து சமூக வலைத் தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி விமா்சனம் செய்துள்ளாா். குமரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, ஒன்றியச் செயலா்கள் டி.சிவா, எஸ்.எல்.எஸ்.வனராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் புகாா் மனு அளித்தனா்.