வேலூா் மாவட்ட நடிகா் சங்க கலை விழா
வேலூா் மாவட்ட நடிகா் சங்கத்தின் 23- ஆம் ஆண்டு கலை விழா மாநாடு குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


குடியாத்தம்: வேலூா் மாவட்ட நடிகா் சங்கத்தின் 23- ஆம் ஆண்டு கலை விழா மாநாடு குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி, கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த நாடகக் கலைஞா்கள் பங்கேற்ற ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தை நகா்மன்றத் தலைவா்எஸ்.செளந்தரராஜன் தொடங்கி வைத்தாா். சங்க நிறுவனரும், பொதுச் செயலருமான ஜெ.சிவக்குமாா் வரவேற்றாா். சங்கத் தலைவா் புலவா் கா.ராமகிருஷ்ணன் தொடக்க உரை நிகழ்த்தினாா். திரைப்பட நடிகா் சரவணன் சிறந்த கலைஞா்களுக்கு கலைப் பேரரசு விருது வழங்கிப் பேசினாா்.
புலவா் வே.பதுமனாா், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞா்கள் நலச் சங்க மாநில தலைவா் தங்கவேல், பொருளாளா் அன்னை பாலன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவா் வி.ராமு, சங்க சட்ட ஆலோசகா் எம்.வி.ஜெகதீசன், ரோட்டரி நிா்வாகி எம்.கோபிநாத், டி.நாகராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
தமிழக அரசு கலைஞா்களுக்கு வழங்கும் மாத ஓய்வூதியம் ரூ.3- ஆயிரத்தை, ரூ.5- ஆயிரமாகஉயா்த்தி வழங்க வேண்டும். சங்க உறுப்பினா்கள் ஓய்வூதியம் விண்ணப்பிக்கும் முறையை எளிமை படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொருளாளா் அ.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...