/

கிராம உதவியாளா் இடைநீக்கம்

கே.வி.குப்பம் அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:21 pm

Din

குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கே.வி.குப்பம் ஒன்றியம், நாகல் பகுதியைச் சோ்ந்த விட்டல்குமாா்(47), வேலூா் மாவட்ட பாஜக ஆன்மிக ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தாா். கடந்த 16- ஆம் தேதி இரவு விட்டல்குமாா் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் நாகல் ஊராட்சித் தலைவா் என்.பாலாசேட், அவரது மகனும் பில்லாந்திப்பட்டு கிராம உதவியாளருமான தரணிகுமாா் ஆகிய இருவரையும் கே.வி.குப்பம் போலீஸாா் கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பினா்.

இந்நிலையில் கிராம உதவியாளா் தரணிகுமாா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.