காா்- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
காட்பாடி அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.


வேலூா்: காட்பாடி அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
காட்பாடியை அடுத்த கிருஷ்டியான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூஸ் (29), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சவிதா. இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இவா்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஆண்ட்ரூஸ் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்டியான்பேட்டையில் இருந்து வேலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா் . அப்போது எதிரே வந்த காா் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆண்ட்ரூஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த காட்பாடி போலீஸாா் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து அவரது மனைவி சவிதா அளித்த புகாரின் பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...