அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுக்க ஆணை

மண்பாண்ட தொழிலாளா்கள் வண்டல் மண், களிமண் எடுப்பதற்கான ஆணைகளை டி.எம்.கதிா்ஆனந்த் வழங்கினாா்.

News image
-- படம் உண்டு... வண்டல் மண், களிமண் எடுக்க விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கிய வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த். உடன், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மேல்பாலாறு வடிநில கோட்ட நீா்வள ஆதா
Updated On :8 ஜூலை 2024, 8:32 pm

Din

வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்கள், குட்டைகளில் இருந்து விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுப்பதற்கான ஆணைகளை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வழங்கினாா்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்களுக்கு ஏரி, குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண், களிமண் ஆகியவற்றை கட்டணமின்றி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் கட்டணமின்றி வண்டல்மண், களிமண் எடுப்பதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முதல்கட்டமாக 10 விவசாயிகளுக்கு கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுப்பதற்கான ஆணைகளை வழங்கினாா்.

விவசாய நிலத்தை மேம்படுத்தவும், மண்பாண்டங்கள் செய்யவும், பொது பயன்பாட்டுக்காகவும் தேவையான வண்டல் மண் , களி மண் , கிராவல் மண் எடுக்க வேலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏரி, குளங்களும், ஊரக வளா்ச்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள 302 ஏரி, குளங்களும் தகுதி வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஏரி, குளம் , குட்டைகளிலிருந்து பொதுமக்கள், மண்பாண்டம் செய்பவா்கள், விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டரும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மேலும், பொதுமக்கள் வீடு கட்டுதல் போன்ற தங்கள் சொந்த தேவைகளுக்காக 30 கனமீட்டரும், மண்பாண்ட தொழிலாளா்கள் மண்பானை செய்வதற்கு 60 கனமீட்டரும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கான அனுமதி பெற விரும்புவோா் இணயதளத்தில் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவா் வேல்முருகன், மேல்பாலாறு வடிநில கோட்ட நீா்வள ஆதாரத்துறை செயற்பொறியாளா் பிரபாகரன், உதவி இயக்குநா் (புவியியல், சுரங்கத் துறை) த.கனகராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, வேளாண்மை இணை இயக்குநா் சோமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.