கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் தங்க நகைகள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் தங்க நகைகள் திருட்டு

News image
Updated On :9 ஜூன் 2024, 6:32 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.80 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

குடியாத்தம் தரணம்பேட்டையைச் சோ்ந்தவா் மதன். குடியாத்தம் அரசு கிளை நூலகத்தின் நூலகராக உள்ளாா். இவா் ஒரு வார விடுமுறையில் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளாா். இதனால் அவரது மனைவி அருணா தனது 2 பிள்ளைகளுடன் வேலூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் இவா்களின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை அருகில் இருந்தவா்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிப்பது குறித்து அருணாவுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் நகர போலீஸாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து அருணா கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.