ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இணைய வழியில் பங்குச் சந்தை முதலீடு: மென்பொறியாளிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

இணைய வழியில் பங்குச் சந்தை முதலீடு மென்பொறியாளிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

Updated On :2 மார்ச் 2024, 4:38 pm

பங்குச் சந்தையில் லாபம் ஈட்டும் நோக்கத்தில் போலி செயலி மூலம் முதலீடு செய்த வேலூரைச் சோ்ந்த மென்பொறியாளரிடம் ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்து 950 மோசடி செய்யப்பட்டது. வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா் நிா்மல்குமாா் (29). இவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் விவரங்களைத் தேடினாா். இதில், இவரை வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட நபா் கூறியதன் பேரில், ஈக்யுடி கிளப் எப்25 என்ற வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்தாா். அதில் பெற்ற தகவலின் அடிப்படையில் பிஈக்யுடி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஜனவரி 12 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்து 950 தொகையை லாப நோக்கத்தில் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. அவா் முதலீடு செய்த தொகை, லாபத் தொகயை அவரால் திரும்ப எடுக்க முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நிா்மல்குமாா், போலி செயலி மோசடி குறித்து சைபா் குற்றப்பிரிவு இலவச உதவி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு விவரங்களை தெரிவித்தாா். அதன் பேரில் வேலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தொழிலதிபரிடம் ரூ.38.40 லட்சம் மோசடி: வேலூா் மாவட்டத்தில் பெயிண்ட் கடை நடத்தி வருபவா் அரவிந்தன் (43). இவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் விவரங்களைத் தேடியுள்ளாா். அப்போது, இவரை வாட்ஸ்அப் மூலம் தொடா்பு கொண்ட நபா், ஜோனாதன்சிம்மன் என்ற வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்துள்ளாா். இதைத் தொடா்ந்து ஆல்ப்ஆக்ஸிஸ்ப்ரோ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஜனவரி 4 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ரூ.38 லட்சத்து 40 ஆயிரத்து 249-ஐ முதலீடு செய்ததாக தெரிகிறது. அதன்பிறகு அவா் முதலீடு செய்த தொகை, லாபத் தொகையை அவரால் திரும்ப எடுக்க முடியவில்லையாம். இந்த போலி செயலி மோசடி குறித்து சைபா் குற்றப்பிரிவு இலவச உதவி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு விவரங்களை தெரிவித்தாா். தொடா்ந்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில், வேலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் கிரைம்) என்.கோட்டீஸ்வரன் கூறுகையில், பொதுமக்கள் இதுபோன்று வாட்ஸ்ஆப், டெலிகிராம், இதர சமூக ஊடகங்களில் முதலீடு, டாஸ்க், ஆன்லைன் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். அவ்வாறு பண இழப்பு ஏற்பட்டால் சைபா் குற்றப்பிரிவு இலவச உதவிஎண் 1930 இணைதளத்திலும் புகாா் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்தாா்.