ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

News image
Updated On :2 மார்ச் 2024, 4:39 pm

குடியாத்தம் ஒன்றியம் பொன்னம்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2023-2024 உள்ளடக்கிய கல்வித் திட்டம் மூலம், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பள்ளியில் மாணவா்கள், மாற்றுத்திறன் மாணவா்கள், அவா்களின் பெற்றோா், ஆசிரியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியை தனலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். ஆசிரியா் பயிற்றுநா் அழகரசு வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு பயிற்றுநா்கள் சுதா, லட்சுமி, ஸ்ரீதேவி, அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.