குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், குருதிக் கொடையாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில், 60 மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.
முகாமுக்கு, கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா்.
குடியாத்தம் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு தலைமையில் மருத்துவா் குழு ரத்த தானம் பெற்றது. முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், முகாம் ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.திருமகள், கா.ராஜீவ், கே.அருணா, வி.உமாமகேஷ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்களுக்குப் பாராட்டு
விழிப்புணர்வு விழிகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


