மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கல்லூரியில் 60 மாணவா்கள் ரத்த தானம்

கல்லூரியில் 60 மாணவா்கள் ரத்த தானம்

News image
Updated On :13 மார்ச் 2024, 2:45 pm

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், குருதிக் கொடையாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில், 60 மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.

முகாமுக்கு, கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு தலைமையில் மருத்துவா் குழு ரத்த தானம் பெற்றது. முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், முகாம் ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.திருமகள், கா.ராஜீவ், கே.அருணா, வி.உமாமகேஷ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.