குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மீன்பிடி தடைக்காலம்: கடல் மீன்கள் வரத்து குறைந்தது

Updated On :28 ஏப்ரல் 2025, 1:02 am IST

தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. வார நாள்களில் நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது. இதனால், மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, வஞ்சிரம் ரூ.1,200 முதல் ரூ.1,400, தேங்காய்பாறை ரூ.400, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் ரூ.350 முதல் ரூ.500, வெள்ளை கொடுவா ரூ.500 முதல் ரூ.1,000, கலங்கா ரூ.220, ஏரி விரால் ரூ.500, நண்டு ரூ.350 முதல் ரூ.450, ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் மீன்கள் கிலோ ரூ.120 முதல் ரூ.150, ஜிலேபி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டன. வரும் 40 நாள்களுக்கு இதே நிலைதான் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.