மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க பயிற்சி

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க பயிற்சி முகாம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 7:30 pm

Din

வேலூா்: முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க பயிற்சி முகாம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

முன்னாள் படை வீரா், அவா்களை சாா்ந்தவா்களை தொழில்முனைவோராக்குவதற்கான ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின்கீழ், தொழில் பயிற்சி முகாம் வேலூா் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, 5 நாள்கள் நடைபெறும் இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசியது:

5 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமை தக்க முறையில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தெந்த பயிற்சிகள் பெற்றால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை அறிந்து அவற்றை தோ்வு செய்யவேண்டும். கடனுதவி, 30 சதவீத மானியம், கடனை திருப்பிச் செலுத்தும்போது 3 சதவீத மானியம் போன்ற சலுகைகள் உள்ளன. இவற்றை முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பயன்படுத்தி தொழில் தொடங்கலாம் என்றாா்.

முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் வேலு முன்னிலை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரா்கள் பங்கேற்றனா்.