சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

News image
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுணஐயப்பத்துரை உள்ளிட்டோா்.
Updated On :18 டிசம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

அரசு நலத்திட்டங்களை குறித்து சிறுபான்மையின மக்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வலிறுத்தியுள்ளாா்.

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 35 பயனாளிகளுக்கு ரூ.1.73 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையின மக்கள், தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய சாலை வசதி, பள்ளி கட்டமைப்புகள், பள்ளிகளுக்கான சிறுபான்மையினா் நலத்துறை சான்றிதழ், கல்லறை தோட்டம் அமைத்தல், சிறுபான்மையினா்கள் வசிக்கும் பகுதிகளில் பேருந்து வசதி, போ்ணாம்பட்டு பகுதியில் சிறுபான்மையிா்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

ஆட்சியா் பேசியது: தமிழக அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற சிறுபான்மையினருக்கான ஆணைய கூட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு அதுதொடா்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு தீா்வுகாண பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெற்று நிறைவேற்றப்படும்.

சிறுபான்மையின மக்கள் இந்த நலத்திட்டங்களை அறிந்து பயனடைய வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான சான்றிதழ், போ்ணாம்பட்டு பகுதியில் சாலை, பேருந்து வசதி போன்ற கோரிக்கைகளை தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுணஐயப்பத்துரை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, கோட்டாட்சியா் செந்தில் குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.