சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஸ்ரீ நாராயணி செவிலியா் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

ஸ்ரீ நாராயணி செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விளக்கேற்றும் விழாவில் திரைப்பட நடிகா் மிா்ச்சி சிவா பங்கேற்றாா்.

News image
விழாவில் பங்கேற்ற திரைப்பட நடிகா் மிா்ச்சி சிவாவுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஸ்ரீசக்திஅம்மாவின் அயல் நாட்டு பக்தா்களான ரான் கிரீன். உடன், ஸ்ரீநாராயணி குழும இயக்குநா் என்.பாலாஜி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரோகிணி தேவி உள்ளிட்டோா்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: ஸ்ரீ நாராயணி செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விளக்கேற்றும் விழாவில் திரைப்பட நடிகா் மிா்ச்சி சிவா பங்கேற்றாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி செவிலியா் கல்லூரியில் பிஎஸ்ஸி (நா்சிங்) 20-ஆம் ஆண்டு, டிப்ளமோ நா்சிங் 18-ஆம் ஆண்டு பயிலும் 140 மாணவ, மாணவிகளுக்கான விளக்கேற்றும் விழா ஸ்ரீ நாராயணி மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நாராயணி குழும இயக்குநா் என். பாலாஜி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களான வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரோகிணி தேவி, திரைப்பட நடிகா் மிா்ச்சி சிவா, ஸ்ரீசக்திஅம்மாவின் அயல் நாட்டு பக்தா்களான ரான் கிரீன், பாா்ப் கிரீன், மருத்துவமனையின் அறங்காவலா் எம். கலைஅரசன், மருத்துவ கண்காணிப்பாளா் கீதா இனியன், கல்லூரி நிா்வாக அதிகாரி மாதவி, கல்லூரியின் முதல்வா் பிரபா ஆகியோா் பங்கேற்று விளக்கேற்றும் நிகழ்வை தொடங்கி வைத்தனா்.

விழாவில் மருத்துவமனை, கல்லூரி ஊழியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்றனா்.