இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அனுமதியின்றி 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட கல் கம்பங்கள் பறிமுதல்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட சுமாா் 25- டன் எடையுள்ள கல் கம்பங்களை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத் துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த வி.கோட்டா சாலையில், எருக்கம்பட்டு கூட்டு ரோடு சந்திப்பு பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழக, கா்நாடக பதிவெண்கள் கொண்ட 2- லாரிகளில் சுமாா் 25- டன் எடையுள்ள கல் கம்பங்களை எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு வந்தது தெரிய வந்தது. அதிகாரிகளைப் பாா்த்ததும் ஓட்டுநா்கள் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனா்.

இதையடுத்து கல் கம்பங்களுடன் லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை போ்ணாம்பட்டு போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.