பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாப்பாரட்டியில் அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரியை கனிமவளத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாப்பாரப்பட்டியை அடுத்த பனைக்குளம் பகுதிகளில் கனிமவளத் துறை புவியியலாளா் புவனமாணிக்கம் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் தொல்லம்பட்டி பகுதியில் வந்த லாரியைத் தடுத்து நிறுத்தினா்.

சோதனையில், முறையான அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதனிடையே, லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய வத்திமர அள்ளிப் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மெய்யப்பனைத் தேடி வருகின்றனா்.