ராணுவ வீரா் தற்கொலை
காட்பாடி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


வேலூா்: காட்பாடி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), ராணுவ வீரா். இவா் கடந்த 15 நாள்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்தாா். இவருக்கு ஏற்கெனவே வயிற்றில் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளாா். எனினும், தொடா்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மீண்டும் வயிற்று வலியால் வேதனை அடைந்த சீனிவாசன், திங்கள்கிழமை வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த காட்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...