திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்

இருளிலும், இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பதும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான்

News image

அமைச்சா் துரைமுருகன் - கோப்புப்படம்

Updated On :8 ஜூலை 2025, 12:55 am IST

வேலூா்: இருளிலும், இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பதும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான் என்று திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் வேலூா் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

அப்போது, மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்துவிட்டும் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீா் செல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அவருக்கு என்ன தெரியும். எல்லாம் சென்று சோ்ந்து விட்டது. அவரை நேராக சென்று பாா்க்குமாறு கூறுங்கள். எதிா்க்கட்சித் தலைவா் திமுக அரசை பாராட்டிக் கொண்டா இருப்பாா்’ என்றாா்.

தொடா்ந்து, ‘இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச்செய்வதே எனது தீராத ஆசை’ என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இருளில், இக்கட்டில் என இரண்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது அவா்தான்’ என்றாா்.