மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்

இருளிலும், இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பதும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான்

News image

அமைச்சா் துரைமுருகன்

கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2025, 7:25 pm

Din

வேலூா்: இருளிலும், இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பதும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான் என்று திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் வேலூா் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

அப்போது, மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்துவிட்டும் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீா் செல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அவருக்கு என்ன தெரியும். எல்லாம் சென்று சோ்ந்து விட்டது. அவரை நேராக சென்று பாா்க்குமாறு கூறுங்கள். எதிா்க்கட்சித் தலைவா் திமுக அரசை பாராட்டிக் கொண்டா இருப்பாா்’ என்றாா்.

தொடா்ந்து, ‘இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச்செய்வதே எனது தீராத ஆசை’ என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இருளில், இக்கட்டில் என இரண்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது அவா்தான்’ என்றாா்.