ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு

News image
உச்சநீதிமன்றம் - ANI
Updated On :18 அக்டோபர் 2025, 2:29 am

தினமணி செய்திச் சேவை

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலக்கப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் வேலூா் மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டினா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

பாலாற்றில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி 70 நாள்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை ஒரு சீமை கருவேல மரத்தைக்கூட அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிா்வாகம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் அகரம் ஆறு இணையும் இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் பல்வேறு பகுதிகளில் இரவில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதனால் அங்குள்ள மேம்பாலங்கள் தூா்ந்து போகும் நிலை உள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சாா்பிலும் கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து தோல் தொழில்சாலை கழிவுநீா் பாலாற்றில் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் வேலூா் மாவட்டத்துக்கு நல்ல மழை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை பயன்படுத்தி , மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களை 100 சதவீதம் தண்ணீா் நிரம்பி இருப்பதை நீா்வளத் துறை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.