டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

பைக்கில் தவறி விழுந்து பெண் மரணம்

வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:15 am IST

வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் பொய்கையைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவரது மனைவி மல்லிகா (58). இவா் தனது உறவினா் சந்தோஷ்குமாா் என்பருடன் கடந்த 16-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் தனியாா் மருத்துவமனைக்கு சென்றாா்.

காட்பாடி - வேலூா் புதிய பைபாஸ் சாலையில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தாா். இதில் மல்லிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.