வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் பொய்கையைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவரது மனைவி மல்லிகா (58). இவா் தனது உறவினா் சந்தோஷ்குமாா் என்பருடன் கடந்த 16-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் தனியாா் மருத்துவமனைக்கு சென்றாா்.
காட்பாடி - வேலூா் புதிய பைபாஸ் சாலையில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தாா். இதில் மல்லிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழாவுக்கு வந்தவா் கிணற்றில் தவறி விழுந்து பலி!

பழவூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள பெண் உயிரிழப்பு

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



