குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட ராஜாகோயில் பகுதியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் இலவச குடிநீா் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா்தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, ஊராட்சி துணைத் தலைவா் ராஜாத்தி தமிழ்ச்செல்வன், ஊராட்சி உறுப்பினா்தாபா சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ராஜ்கமல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் ஜி.ஜெயப்பிரகாஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.









