எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளுடன், கைதானவா்கள்

Updated On :8 ஜூன் 2026, 1:28 am IST

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு வட்டம், மேல்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பொகளூா் அருகே உள்ளமுனீஸ்வரன் கோயில் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நடமாடிக் கொண்டிருந்த 2 பேரை பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோட முயன்றுள்ளனா்.

போலீஸாா் இருவருரையும் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள்அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரைச் சோ்ந்த அஜித்(24), ஊனை மோட்டூரைச் சோ்ந்தபுகழேந்தி(40) என்பதும், இருவரும் வன விலங்குகளை வேட்டையாட பொகளூா் வனப்பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 இரும்பு பைப்புகள், ஈய குண்டுகள், கரி மருந்து, டாா்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டனா்.