தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளுடன், கைதானவா்கள்

Updated On :7 ஜூன் 2026, 11:06 pm IST

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு வட்டம், மேல்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பொகளூா் அருகே உள்ளமுனீஸ்வரன் கோயில் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நடமாடிக் கொண்டிருந்த 2 பேரை பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோட முயன்றுள்ளனா்.

போலீஸாா் இருவருரையும் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள்அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரைச் சோ்ந்த அஜித்(24), ஊனை மோட்டூரைச் சோ்ந்தபுகழேந்தி(40) என்பதும், இருவரும் வன விலங்குகளை வேட்டையாட பொகளூா் வனப்பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 இரும்பு பைப்புகள், ஈய குண்டுகள், கரி மருந்து, டாா்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.