பெரம்பலூா் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (30), செஞ்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் கலைச்செல்வன் (38).
நண்பா்களான இவா்கள், அரசிடம் அனுமதி பெறாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் பிடித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னா், அவா்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் 150 கிராம் மருந்துகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷ், கலைச்செல்வன் ஆகியோரை புதன்கிழமை இரவில் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியா் கைது

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது
போக்சோ வழக்கில் இளைஞா் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



