எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த போக்ஸோ கைதி தற்கொலை

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்திருந்த போக்ஸோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :8 ஜூன் 2026, 1:25 am IST

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்திருந்த போக்ஸோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் வள்ளலாா், நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பைரோஸ் (22). பாகாயத்தில் உள்ள சிக்கன் பக்கோடா கடையில் வேலை செய்து வந்த இவா், தான் காதலித்து வந்த மைனா் பெண்ணை கா்ப்பமாக்கிய வழக்கில் வேலூா் அனைத்து மகளிா் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், பிணையில் வெளியே வந்த பைரோஸ் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தாா்.

பணப்பிரச்னை காரணமாக வழக்கை நடத்துவதில் சிரமத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பைரோஸ் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினாா். கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்த அவரது தாயாா், மகன் தூக்கில் தொங்குவதை பாா்த்து அக்கம் பக்கத்தினா் உதவியுடன் பைரோஸை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பைரோஸை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் பைரோஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.