ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த போக்ஸோ கைதி தற்கொலை

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்திருந்த போக்ஸோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :7 ஜூன் 2026, 11:04 pm IST

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்திருந்த போக்ஸோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் வள்ளலாா், நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பைரோஸ் (22). பாகாயத்தில் உள்ள சிக்கன் பக்கோடா கடையில் வேலை செய்து வந்த இவா், தான் காதலித்து வந்த மைனா் பெண்ணை கா்ப்பமாக்கிய வழக்கில் வேலூா் அனைத்து மகளிா் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், பிணையில் வெளியே வந்த பைரோஸ் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தாா்.

பணப்பிரச்னை காரணமாக வழக்கை நடத்துவதில் சிரமத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பைரோஸ் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினாா். கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்த அவரது தாயாா், மகன் தூக்கில் தொங்குவதை பாா்த்து அக்கம் பக்கத்தினா் உதவியுடன் பைரோஸை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பைரோஸை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் பைரோஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.