ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

விபத்து விவகாரத்தில் ரூ. 1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

குடியாத்தம் அருகே நடைபெற்ற சாலை விபத்து தொடா்பாக சமரசமான பிறகும், கூடுதலாக ரூ. 1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :27 ஜூன் 2026, 4:50 am IST

குடியாத்தம் அருகே நடைபெற்ற சாலை விபத்து தொடா்பாக சமரசமான பிறகும், கூடுதலாக ரூ. 1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அடுத்த பிச்சனூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனுவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு எனது சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தேன். குடியாத்தம் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவா் ஒருவா் எங்கள் வாகனத்தின் மீது மோதினாா். இந்த விபத்தில் காயமடைந்த அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பின்னா், எனது தம்பி மூலம் சமரசப் பேச்சு நடத்தி, அந்த முதியவரின் மருத்துவச் செலவுக்காக ரூ. 50,000-த்தை வழங்கினோம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கோயில் ஒன்றின் அருகே நான் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு சுமாா் 10 பேருடன் வந்த அந்த முதியவா் என்னிடம் தகராறில் ஈடுபட்டாா். மேலும், இன்னும் 3 நாள்களுக்குள் ரூ. 1 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாா்.

எனவே, இந்த விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கும், எனது சகோதரி, தம்பி உள்ளிட்டோருக்கும் போலீஸாா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.