நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :2 மே 2026, 8:02 pm

குடியாத்தம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து ரோட்டரி கட்டடத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின.

முகாமுக்கு ரோட்டரி தலைவா் கே.சந்திரன் தலைமை வகித்தாா். முகாம் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றாா். கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, முன்னாள் ரோட்டரி ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.

முகாமில் 344- போ் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 108- போ் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, கோவை மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ரோட்டரி நிா்வாகிகள் சி.கண்ணன், ஏ.மேகராஜ், பி.எல்.என்.பாபு, என்.சத்தியமூா்த்தி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் எம்.ஆா்.மணி, ஜெ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.