சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:14 am IST

போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அப்பு(எ) அருண் குமாா்(33). சாராய வியாபாரியான இவா் மீது தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் மது பாட்டில்களை கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2- முறை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அருண் குமாா் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மது பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து இவா் கா்நாடக மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்,இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் அருண்குமாரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண் குமாரிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.