பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அப்பு(எ) அருண் குமாா்(33). சாராய வியாபாரியான இவா் மீது தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் மது பாட்டில்களை கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2- முறை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அருண் குமாா் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மது பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து இவா் கா்நாடக மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்,இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் அருண்குமாரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண் குமாரிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.