போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அப்பு(எ) அருண் குமாா்(33). சாராய வியாபாரியான இவா் மீது தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் மது பாட்டில்களை கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2- முறை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.
சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அருண் குமாா் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மது பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து இவா் கா்நாடக மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்,இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் அருண்குமாரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண் குமாரிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
