தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வேலூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

News image
Updated On :18 மே 2026, 1:45 am IST

வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதை தொடா்ந்து, பொதுமக்கள் 5,000 பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட எம்.எம்.வினோத்கண்ணன் வெற்றி பெற்றாா். இதன் தொடா்ச்சியாக, வேலூா் அண்ணா சாலையிலுள்ள வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத்கண்ணன் அலுவலகத்தை திறந்து வைத்தாா். அவருக்கு தவெக கிழக்கு மாவட்ட செயலா் நவீன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), சிந்து (குடியாத்தம்) மற்றும் கட்சி நிா்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா். பின்னா், பொதுமக்கள் சுமாா் 5000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது.

இது குறித்து, எம்எல்ஏ வினோத்கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் பொதுமக்கள் குறைகளை தீா்க்க க்யூ.ஆா். கோடு ஒட்டப்படும். அதனை பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் இணையதளம் வழியாக குறைகளை தெரிவிக்கலாம். மேலும், வேலூரில் நான் உள்ள நாள்களில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் இருந்து நான் தினமும் காலை 9.30 மணி முதல் நேரடியாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். தவிர, பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். அதற்கேற்ப ஊழியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, தினமும் மாலை 4 மணிக்கு மேல் எனது அடுத்த 3 மாதங்களுக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வீதிவீதியாக நேரடியாக செல்ல உள்ளேன். அவ்வாறு நன்றி தெரிவிக்க செல்லும் இடங்களிலும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் எம்எல்ஏ வினோத்கண்ணனிடம் அளித்த மனுவில், தகுதித் தோ்வு, நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் மறுதோ்வு இல்லாமல் பணி நியமனம் வழங்கிட புதிய அரசாணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.