குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

வேலூா் அருகே தனியாா் பேருந்து - லாரி நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:03 am IST

வேலூா் அருகே தனியாா் பேருந்து - லாரி நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் தயாளன் இயக்கினாா்.

இந்த பேருந்து வேலூா் மாவட்டம், கருகம்புத்தூா் அருகே சென்றபோது எதிா்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது பேருந்து திடீரென மோதியது.

இதில் பேருந்து ஓட்டுநா் தயாளனுக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் தயாளனின் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.