விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனா்.
திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மதிய உணவுடன் வழங்குவதற்காக முட்டைகள் அவிக்கப்பட்டன. இந்த நிலையில், அந்த முட்டைகள் கெட்டுப்போயிருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மயிலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிலம்புசெல்வன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று முட்டைகளை ஆய்வு செய்தனா்.
இதில், முட்டைகள் கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 490 முட்டைகளையும் அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனா். மேலும், பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட முட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
தொடர்புடையது

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து விசாரிக்க கோரிக்கை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


