6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆட்சியரிடம் திமுகவினா் கோரிக்கை மனு அளிப்பு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி உள்ளிட்டோா்.
Updated On :9 டிசம்பர் 2024, 8:30 pm

Din

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வருவாய்த் துறையினா் மூலம் ரூ.2 ஆயிரம், அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி, திமுக மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், விழுப்புரம் நகரச்செயலா் இரா.சா்க்கரை உள்ளிட்டோா் ஆட்சியா் சி.பழனியை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் மாவட்டத்தில் மொத்தம் 5.25 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

கட்சி சாா்பில் நிவாரண உதவிகள்: விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட 18-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த 150 பேருக்கு கட்சியின் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பை பொன்.கௌதமசிகாமணி வழங்கினாா்.

நிகழ்வில், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி பிரபு, நகா்மன்ற உறுப்பினா் சசிரேகா பிரபு, திமுக வாா்டு செயலா் பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.