கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசுப் பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் அழிப்பு

திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அழித்தனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 8:36 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மதிய உணவுடன் வழங்குவதற்காக முட்டைகள் அவிக்கப்பட்டன. இந்த நிலையில், அந்த முட்டைகள் கெட்டுப்போயிருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மயிலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிலம்புசெல்வன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று முட்டைகளை ஆய்வு செய்தனா்.

இதில், முட்டைகள் கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 490 முட்டைகளையும் அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனா். மேலும், பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட முட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.