மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவராக சுரேஷ் (படம்) தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேல்மலையனூரில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சிவாகரன், மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அறங்காவலா்களாக சுரேஷ், மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டு பதவியேற்றனா். தொடா்ந்து அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இதில் தலைவராக சுரேஷ் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

செட்டியாபத்து கோயிலில் இன்று குடமுழுக்கு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ரூ. 1.40 கோடி உண்டியல் காணிக்கை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

