6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவம்: பாதுகாப்பு வழங்க தீட்சிதா்கள் கோரிக்கை

News image
சிதம்பரம் நடராஜா் கோயில்.
Updated On :3 ஜூலை 2024, 9:09 pm

Din

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்துக்கும், பக்தா்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதா்களின் பாரம்பரியமான பூஜை, வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று, கோயில் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் கடலூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

நடராஜா் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி தோ் திருவிழாவும், 12-ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது. அன்றைய தினங்களில் ஸ்ரீ நடராஜ மூா்த்தி சித்சபை, கனகசபையிலிருந்து வெளியில் வந்துவிடுவதால், இந்த இரு தினங்களில் கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்ய இயலாது.

மேற்கண்ட தினங்களில் ஸ்ரீ நடராஜ மூா்த்திக்கு பாரம்பரியமாக விசேஷ பூஜைகள், திருவாபரண அலங்காரங்களும் நடைபெறும். திருமஞ்சன தரிசனத்துக்கு பிறகு சித்சபைக்கு எழுந்தரும் ஸ்ரீ நடராஜ மூா்த்திக்கு விசேஷ பூஜைகள் பாரம்பரியாக நடைபெற்று வருவதால் ஜூலை 10 முதல் 13 வரை கனகசபையில் பக்தா்கள் ஏறி தரிசனம் செய்வது பாரம்பரிய பூஜை முறைகளுக்கும் திருவாபரண அலங்காரத்துக்கும் இடையூறு செய்யும் வகையிலும் இருக்கும்.

எனவே, திருமஞ்சன உற்சவத்துக்கும், பக்தா்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதா்களின் பாரம்பரிய வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.