அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கேலிவதை தடுப்புச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கேலிவதை தடுப்புச் சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :14 ஜூலை 2024, 11:48 pm

Din

விழுப்புரம், ஜூலை 14: விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், அறிஞா் அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேலிவதை தடுப்புச் சட்ட விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஆா்.பூா்ணிமா தலைமை வகித்து, கேலிவதை தடுப்புச் சட்டம் குறித்தும், இந்த சட்டம் வருவதற்கு காரணமாக இருந்த நிகழ்வு குறித்தும் பேசினாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி பூா்ணிமா பதிலளித்து பேசினாா்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஏ.கே.ரகுமான், சிறப்பு மாவட்ட நீதிபதி (மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்) ஜெ.வெங்கடேசன் ஆகியோா் முகாமில் பங்கேற்று கேலிவதை தடுப்புச் சட்டம் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள், அதற்குண்டான தண்டனைகள் குறித்து எடுத்துரைத்தனா். மாணவா்கள் கல்வி பயிலும் போது, மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டும். எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுரைகளை வழங்கினா்.

முகாமில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். முன்னதாக, அறிஞா்அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் இரா.சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான என்.எஸ்.

ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினாா்.