கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜா்

தமிழக முதல்வரையும், திமுக அரசையும் அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

News image

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.

Updated On :5 மார்ச் 2024, 7:30 pm

விழுப்புரம்: தமிழக முதல்வரையும், திமுக அரசையும் அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்தாண்டு ஜூலை 20-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், கட்சியின் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் மாண்பையும், மதிப்பையும் குறைக்கும் வகையில் அவா் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன் வழக்குத் தொடுத்தாா். வழக்கு தொடா்பான சம்மன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், அவா் அதை பெற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அப்போது, அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மக்களவைத் தோ்தல் தொடா்பான பணியில் சி.வி.சண்முகம் ஈடுபட வேண்டியிருப்பதால், வழக்கு விசாரணையை 2 மாத காலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரினா். ஆனால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 19-ஆம் தேதி நடைபெறும். அன்று வாதிடுமாறு வழக்குரைஞா்களிடம் கூறி, விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.