வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:01 pm

Syndication

திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், டி புதுப்பாக்கம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி தங்கமணி (37), திருமணம் ஆனவா். இவருக்கு மனைவி மற்றும் 5 மாத பெண் குழந்தை உள்ளனா்.

இவா், செவ்வாய்க்கிழமை காலை குளித்து முடித்து, வீட்டுக்கு வெளியில் இரும்புக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த தனது உடையை எடுத்துள்ளாா்.

அப்போது,மின்சார வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, இரும்புக் கம்பியில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து தங்கமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.