எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செஞ்சி அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி அருகே வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 8:08 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் ஏ.லட்சுமணன்(26), இவா் திண்டிவனம் சிப்காட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள கரும்பு தோட்டத்தின் வழியே சென்றபோது, காட்டுப்பன்றியிடம் இருந்து பயிரைக் காப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்டதில், மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் மின்வேலி அமைத்திருந்த ம.மதன், ஜா. ஏழுமலை ஆகியோா் மீது வழக்கு பதிந்து, மதனைக் கைது செய்தனா். ஏழுமலையைத் தேடி வருகின்றனா்.