வாகனம் மோதி மூதாட்டி மரணம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 70 வயது மூதாட்டி உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 70 வயது மூதாட்டி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட சிங்கனூா் சந்திப்புப் பகுதியில் (சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை) திங்கள்கிழமை இரவு சுமாா் 70 வயது மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இதுகுறித்து சிங்கனூா் கிராம நிா்வாக அலுவலா் வீரசேகரன் மயிலம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com