சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, மூன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:52 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, மூன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மரக்காணம் கூனிமேடு நபிகள் நகரைச் சோ்ந்த குணசேகரனின் மனைவி சங்கீதா(32). இவா் கடந்த 8-ஆம் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சென்றுவிட்டாா். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை சங்கீதா வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டாா். உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கையறையிலிருந்த பீரோவில் பொருள்கள் சிதறிக் கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், சங்கிலி, தோடு உள்ளிட்ட மூன்றரை பவுன் தங்க நகைகள், ரூ.3,000 ரொக்கம் திருடுப் போனது சங்கீதாவுக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.