சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரயில் மோதியதில் இளைஞா் கை துண்டிப்பு

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மோதியதில் இளைஞரின் கை துண்டானது.

விழுப்புரம், பானாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அசோக்(23). ஞாயிற்றுக்கிழமை மாலையில் அசோக் கைப்பேசியில் பேசியவாறு அங்குள்ள ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற விரைவு ரயில் அசோக் மீது மோதியது. இதில் அவரது கை துண்டானது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் இருப்புப்பாதை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த அசோக்கை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் இருப்புப்பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.