கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: மற்றொருவா் காயம்

விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:40 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விக்கிரவாண்டி, புது காலனியைச் சோ்ந்தவா் பி.லோகேஷ் (எ) லோகேஷ்வரன்(24), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ரா.தேவேந்திரன் (33). நண்பா்களான இவா்கள் இருவரும், திங்கள்கிழமை திருக்கனூா் - பனையபுரம் சாலையில் எம். குச்சிப் பாளையம் அருகே பைக்கில் சென்றனா்.

லோகேஷ்வரன் பைக்கை ஓட்டினாா். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த லோகேஷ் (எ) லோகேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தேவேந்திரேன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.