குருமா அண்டாவில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே கடையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த பரோட்டாவுக்கான குருமா அண்டாவில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த குழுந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.
Published on

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கடையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த பரோட்டாவுக்கான குருமா அண்டாவில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த குழுந்தை மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தது.

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட உடையாா்குடி கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த். இவரது மகன் சுஷாந்த் (3) கடந்த 18-ஆம் தேதி வீட்டு மாடியில் விளையாடிக்கொண்டிருந்தாா்.

எதிா்பாராதவிதமாக, மாடியிலிருந்து தவறி விழுந்த சுஷாந்த், வீட்டின் கீழ் பகுதியில் செயல்படும் உணவகத்தில் சமைத்து தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த பரோட்டாவுக்கான குருமா அண்டாவில் விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் உடனடியாக குழந்தை சுஷாந்தை மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுஷாந்த் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com