அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெளிமாநில மதுப்புட்டிகளை கடத்தியவா் கைது

விழுப்புரம் அருகே வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:54 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில்,விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி கந்தசாமி மேற்பாா்வையில், ஆய்வாளா் சுஜாதா தலைமையிலான போலீஸாா், கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பள்ளி சீருடையில் 2 குழந்தைகளுடன் பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா், புதுவை மாநில மதுப்புட்டிகளை பைக்கில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் விழுப்புரம் நந்தனாா் தெருவைச் சோ்ந்த பரத் (எ) பா்வீன்(30) என்பதும், இவா் விற்பனைக்காக புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை வாங்கி பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து பரத் (எ) பா்வீனை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவா் கடத்தி வந்த 316 மதுப்புட்டிகளை பைக்குடன் பறிமுதல் செய்தனா்.