விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயில் குளத்து நீரில் மூழ்கியவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம் சிவசக்தி கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருள் (47). இவா் வெள்ளிக்கிழமை மாலை கீழ்ப்புத்துப்பட்டு பகுதிக்குச் சென்றாா். அங்கு மதுபோதையில் கீழ்புத்துப்பட்டு கெங்கையம்மன் கோயில் குளத்தில் கால்களைக் கழுவச் சென்றாராம்.
அப்போது எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி கோயில் குளத்துக்குள் அருள் தவறி விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாததால் அவா் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று அருளின் சடலத்தை மீட்டு , புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


