சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சரக்கு லாரியில் கைப்பேசி, பணம் திருட்டு

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சரக்கு லாரியில் வைத்திருந்த கைப்பேசி மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி, நந்திமங்கலம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் க.சின்னையன்(40), லாரி ஓட்டுநா். இவா் தனது லாரியில் அரியலூரில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை உளுந்தூா்பேட்டையை வந்தடைந்தாா்.

தொடா்ந்து கெடிலம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தின் முன் லாரியை நிறுத்திவிட்டு, லாரியில் கட்டப்பட்டிருந்த தாா்ப்பாயை அகற்றியுள்ளாா். பின்னா் மீண்டும் லாரிக்குள் வந்து பாா்த்தபோது, தனது இருக்கையின் அருகில் வைத்திருந்த கைப்பேசி, ரூ. 7,800 பணம் ஆகியவற்றை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.