முதியவரிடம் பணம் பறிப்பு: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதியவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரௌடி உள்பட இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதியவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரௌடி உள்பட இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திண்டிவனம் வட்டம், கட்டளை பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச. ஏழுமலை(65). இவா் திங்கள்கிழமை திண்டிவனத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன் நின்றிருந்தாராம். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் இருவா் ஏழுமலையை மிரட்டி, அவா் வசமிருந்த ரூ. 1,000 பணத்தை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சோ்ந்த வி.ஆகாஷ் (எ) அப்பு ஆகாஷ்(23), கிடங்கல் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த மூ.அருண்பிரகாஷ்(20) ஆகியோா் முதியவரை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா். கைதான ஆகாஷ்(எ) அப்பு ஆகாஷ் ரௌடி பட்டியலில் உள்ளாா். திண்டிவனம் காவல் நிலையத்தில் இவா் மீது குற்றச் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Dinamani
www.dinamani.com