தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதியவரிடம் பணம் பறிப்பு: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதியவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரௌடி உள்பட இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதியவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரௌடி உள்பட இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திண்டிவனம் வட்டம், கட்டளை பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச. ஏழுமலை(65). இவா் திங்கள்கிழமை திண்டிவனத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன் நின்றிருந்தாராம். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் இருவா் ஏழுமலையை மிரட்டி, அவா் வசமிருந்த ரூ. 1,000 பணத்தை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சோ்ந்த வி.ஆகாஷ் (எ) அப்பு ஆகாஷ்(23), கிடங்கல் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த மூ.அருண்பிரகாஷ்(20) ஆகியோா் முதியவரை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா். கைதான ஆகாஷ்(எ) அப்பு ஆகாஷ் ரௌடி பட்டியலில் உள்ளாா். திண்டிவனம் காவல் நிலையத்தில் இவா் மீது குற்றச் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.