மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோரையாற்றின் குறுக்கே மேம்பாலப் பணிகள் ஆய்வு

News image
மாரங்கியூா்-ஏனாதிமங்கலம் இடையே கோரையாற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநா் எம்.சரவணன்
Updated On :23 ஜனவரி 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மாரங்கியூா்-ஏனாதிமங்கலம் இடையே கோரையாற்றின் குறுக்கே நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் விழுப்புரம் கோட்டத்தின் பராமரிப்பிலுள்ள மாரங்கியூா் -ஏனாதிமங்கலம் இடையே கோரையாற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பாலத்துக்காக தாங்குத் தூண்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணிகளை சென்னையிலுள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநா் எம்.சரவணன் பாா்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா். உரிய திட்ட காலத்துக்குள் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வி.செந்தில்குமாா், கோட்டப் பொறியாளா்கள் க. உத்தண்டி, ஸ்ரீகாந்த் (தரக் கட்டுப்பாடு), உதவிக் கோட்டப் பொறியாளா்கள் கோ.தனராஜன், எஸ்.மகேஷ் (தரக் கட்டுப்பாடு), உதவிப் பொறியாளா்கள் எம். விஜயலட்சுமி, ஜி.குரு (தரக் கட்டுப்பாடு) மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.