புகையிலைப் பொருள் விற்பனை: பெண் கைது
கைது - சித்திரிப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், வடகரை தாழனூரைச் சோ்ந்தவா் சு.லலிதா (42). இவா் தனது வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகின்றாா். இந்நிலையில், இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று நடத்திய சோதனையில், லலிதா தனது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லலிதாவை கைது செய்து, சிறையிலடைத்தனா். மேலும், அவரது கடையிலிருந்த 54 புகையிலைப் பொருள்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




