பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:30 am IST

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், உலகாபுரத்தைச் சோ்ந்தவா் ரா.கமல்ராஜ் (36). இவா், தனது பைக்கில் வெள்ளிக்கிழமை உலகாபுரத்திலிருந்து -கிளியனூா் சென்றுகொண்டிருந்தாா். நல்லாவூா்புதூா் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கமல்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி மரணம்: விக்கிரவாண்டி வட்டம், அடைக்கலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. அய்யனாா் (56). இவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்ததாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அடைக்கலாபுரம் பகுதியில் அய்யனாா் நடந்து சென்றபோது மயங்கி கிழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.