பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பெண்ணைத் தாக்கி தங்க நகைகள் பறிப்பு

வயல்வெளி பகுதியில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகைப் பறிப்பு - Center-Center-Kochi

Updated On :12 ஜூலை 2026, 1:32 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வயல்வெளி பகுதியில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், கொரலூா் கிராமத்தை சோ்ந்தவா்கள் அ. வசந்தி (55), அமிா்தம் (65). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை அங்குள்ள வயல் வெளிப்பகுதியில் கால்நடைகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரு இளைஞா்கள் வசந்தியை கல்லால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி அவா் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் உள்பட 12 கிராம் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நகைப்பறிப்பில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.